G.C.E.O/L-2022(2023)
தமிழ்மொழியும் இலக்கியமும், பகுதி 111
01. சுருக்கமான விடை தருக.
(i) "எட்டுணையானும் இரவாது தான் ஈதல் எத்துணையும் ஆற்றல் இனிது"
(அ). எட்டுணை என்பதைப் பிரித்து எழுதுக?
(அ) எண் + துணை
(ஆ). எத்துணை என்பதன் பொருள் யாது?
(ஆ) எவ்வளவு / எல்லா வகையிலும்
(ii). "பொதிகை வரையினிற் கால் கொண்டு"
(அ) பொதிகை என்பது யாது?
(அ) ஒரு மலை / மலை / குன்று / கிரி / பருவதம்
(ஆ) 'கால் கொண்டு' என்பதனை விளக்குக?
(ஆ) நிலைபெற்று / படிந்து / தவழ்ந்து /துணை கொண்டு
(iii) "காவற்பரணில் கண்ணுறங்கும் வேளையிலே கண்ணான மச்சி
வந்தென் காலூன்றக் கண்டேனே"
(அ) தலைவியின் முக்கியத்துவத்தை தலைவன் எச்சொல்லால் வெளிப்படுத்துகின்றான்?
(அ) கண்ணான / கண் / கண் போன்ற / கண்ணான மச்சி
(ஆ) இங்கு 'காலூன்றல்' என்பதன் பொருள் யாது?
(ஆ) காலைப் பற்றுதல் / கால்களில் கையை ஊன்றுதல் / காலை வருடுதல்.
(iv) "சினிமா மொழி, மொழிபெயர்க்க முடியாத ஒன்று.
அது மனித குலத்துக்கே பொதுவானது"
(அ) சினிமா மொழிக்கும் ஏனைய மொழிகளுக்கும் இடையிலான வேறுபாடு யாது?
(அ) ஏனைய மொழிகளை மொழிபெயர்க்கலாம்; சினிமா மொழியை மொழிபெயர்க்க முடியாது.
(ஆ) சினிமா மொழி எந்த மொழி பேசுவோராலும் விளங்கிக் கொள்ளத்தக்கது என்பதை உணர்த்தும் தொடர் யாது?
(ஆ) அது மனித குலத்துக்கே பொதுவானது.
(v) "தங்கச்சியை வாரிக்கொண்டா. அவட கண்கள் இரண்டும் ததும்பிப் பீறின"
(அ) தங்கச்சியை வாரிக்கொண்டா' என்பதன் மூலம்
வெளிப்படும் உணர்ச்சி யாது?
(அ) அன்பு / பாசம் / இரக்கம்
(ஆ) தங்கச்சியை வாரிக்கொண்டது யார்?
(ஆ) மூத்தம்மா
(vi) குணக்குன்றாய் உழைத்துண்ணும் குலவிளக்காம் மனிதன்"
(அ) இங்கு
மனிதனின் சிறந்த செயலாகக் கூறப்படுவது யாது?
(அ) உழைத்துண்ணல்
(ஆ) 'குணக்குன்று' என்பது என்ன அணி?
(ஆ) உருவகம்
(vii) மூடருக்கும் பேடருக்கும் முதியோர் மெலியோர்க்குந் தேடருநல் இரத்தினம் போற் தெரிவையரைச் சேர்த்துவரோ?"
(அ) 'பேடர்'
எனப்படுபவர் யாவர்?
(அ) துணிவற்றவர் / ஆண்மையற்றவர் / பேதைமை உடையவர் / வீரமற்றவர் / பேதைமை
(ஆ) இங்கு பெண்கள் எவ்வாறு சிறப்பிக்கப்படுகின்றனர்?
(ஆ) கிடைத்தற்கரிய இரத்தினம் போன்றவர்கள் / இரத்தினம் போன்றவர்
(viii) "மடப்பாவை தன்வரமும் என்வரமும் வழுவா
வண்ணம் கோடுகின்ற மொழியவன்பால் எனைத்
தூது விடுக."
(அ) இக்கூற்று யாரால் யாருக்குக் கூறப்பட்டது?
(அ) வீமனால் தருமனுக்கு
(ஆ) கோடுகின்ற மொழியவன் யார்?
(ஆ) துரியோதனன் / திருதராட்டினன்
(ix) "நெறி திறம்பாத் தன்மெய்யை நிற்பதாக்கி இறந்தான் தன் இளந்தேவி"
(அ) 'இளந்தேவி' எனப்படுபவள் யார்?
(அ) சுமித்திரை
(ஆ) இங்கு தசரதனுடைய எச்சிறப்பு உணர்த்தப்படுகின்றது?
(ஆ) வாய்மை தவறாமை / சத்தியம் தவறாமை / நீதிநெறி
(x) யாதும் ஊரே யாவரும் கேளிர் என்றும் யாதானும் நாடாமால் ஊராமால் என்றும் கூறுவதற்கு இம் மனப்பான்மை ஊக்கமளித்தது."
(அ) இங்கு
சுட்டப்படும் மனப்பான்மை எது?
(அ) பரந்த உலக மனப்பான்மை / ஓருலக மனப்பான்மை / உலக மனப்பான்மை
(ஆ) 'யாதானும் நாடாமால் ஊராமால்' என்ற தொடரை விளக்குக?
(ஆ) எல்லா நாடும் நமது நாடாகும். எல்லா ஊரும் நமது ஊராகும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக