G.C.E.O/L-2019,
தமிழ்மொழியும் இலக்கியமும்,
கடந்தகால வினாத்தாள்
பகுதி 111,
1. சுருக்கமான விடை தருக.
(i). "கணக்காயரில்லாதவூரும் பிணக்கறுக்கு மூத்தோரையில்லா வவைக் களனும்"
(அ) இங்கே 'மூத்தோர்' என்போர் யார் ?
அ. அறிவுடையோர் / அறிவும் அனுபவமும் உடையோர் / அறிஞர்
(ஆ) 'அவைக்களன்' என்பதன் பொருள் யாது ?
ஆ. சபை / சபை கூடும் இடம் / அவை
(ii). "வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும்" - இங்கு
(அ). வானரம் என்பது யாது?
அ. ஆண் குரங்கு
(ஆ) மந்தி என்பது யாது ?
ஆ. பெண் குரங்கு
(iii). "இன்பப்பயன் காணச் செய்கின்ற இலட்சியம், சமூகமாகிய உடலுக்கு உயிராக அமைந்துள்ளது."
(அ) இங்கு இடம்பெற்றுள்ள அணி யாது?
அ. உருவக அணி
(ஆ) இங்கு உடலாகவும் உயிராகவும் கருதப்படுபவை யாவை ?
ஆ.1. சமூகம்
2. இலட்சியம்
(iv). "மாமி மகளே என்ர மருதங்கிளி வங்கிசமே ஏலங்கிராம்பே"
(அ) 'வங்கிசம்' என்பது எதனைக் குறிக்கிறது?
அ. பரம்பரை / வம்சம் / குடும்பம்
(ஆ) 'கிராம்பே' என்பதை எழுத்து வழக்கில் தருக?
ஆ. கராம்பு/ கிராம்பு
(v). "கொற்றத்தார்க் குரிசில் இவர் யார்?"
(அ) இவ்வாறு வினவியவர் யார்?
அ. குகன்
(ஆ) 'கொற்றத்தார்க் குரிசில்' எனக் குறிப்பிடப்படுபவர் யார்?
ஆ. பரதன்
(vi). "திணிமணற் செய்வுறு பாவைக்குக் கொய்பூத் தைஇ"
(அ) இங்கு குறிப்பிடப்படும் விளையாட்டு யாது?
அ. பாவை விளையாட்டு / வண்டற்பாவை விளையாட்டு
(ஆ) இங்கு குறிப்பிடப்படும் பாவை எதனால் ஆக்கப்படுகிறது?
ஆ. மணல் / மண் / வண்டல்
(vii). "அங்கப்பாரு மனே உன்ட மூத்த வாப்பா தலய, சூப்பின பனங்கொட்ட மாதிரி"
(அ) 'மூத்த வாப்பா' எனக் குறிக்கும் உறவுப் பெயருக்குச் சமனான வேறு பெயர் யாது?
.அ. பாட்டன் / தாத்தா / பேரன்
(ஆ) இதில் இடம்பெற்ற அணி யாது ?
ஆ. உவமையணி
(viii). "நெஞ்சகத்தை நிறைத்திருக்கும் நிர்மலமாம் வானில்
நிறைமதி தன் துணைவியர்கள் சூழவரும் கோலம்"
(அ) இங்கு களங்கமின்மையை உணர்த்தும் சொல் யாது?
அ. நிர்மலம்
(ஆ) 'துணைவியர்கள்' என்று குறிப்பிடப்படுபவை யாவை?
ஆ. நட்சத்திரங்கள்
(ix). "நண்பர் 486 கம்பியூட்டர், 486 கம்பியூட்டர் என்று உச்சாடனம் செய்தவாறே அதன் வீரப்பிரதாபங்களைப்
பற்றி ஒரு பரணி பாடினார்"
(அ) இங்கு குறிப்பிடப்பட்டுள்ள பிரபந்தம் யாது?
அ. பரணி
(ஆ) உச்சாடனம் செய்தல் என்பதன்மூலம் உணர்த்தப்படுவது யாது?
ஆ. மீண்டும் மீண்டும் கூறல்
தொடர்ந்து கூறல்
(x). "முந்து ஊர் வெம் பணிக்கொடியோன் மூதூரில்"
(அ) இங்கு 'பணிக்கொடி' என்பது எதனைக் குறிக்கிறது?
அ. பாம்புக் கொடி
(ஆ) இங்கு 'மூதூர்' எனக் குறிப்பிடப்படுவது யாது?
ஆ.அஸ்தினாபுரம் / குருநாடு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக