24.11.25

தொகைச்சொற்கள்

தொகைச்சொற்கள்

 

இருநிதி : சங்கநிதி, பதுமநிதி.

இருதிணை : உயர்திணை, அஃறிணை.

இருவினை : நல்வினை, தீவினை.

இருசுடர் : சூரியன், சந்திரன்.

இருபிறப்பு : சனனம், உபநயனம்

முக்கனி : வாழைக்கனி, பலாக்கனி, மாங்கனி.

முத்தமிழ் : இயல்,இசை,நாடகம்.

முச்சங்கம் : முதற்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம்.

மும்மூர்த்திகள் : சிவன், திருமால், பிரமா

மும்மதம் : கன்னமதம், கபோலமதம், பீசமதம்.

முப்பொருள் : பதி, பசு, பாசம்.

மும்மலம் : ஆணவம், கன்மம், மாயை.

மும்முரசு : வீரமுரசு, மங்கலமுரசு, கொடைமுரசு.

மூவேந்தர் : சேரர், சோழர், பாண்டியர்.

முப்பால் : அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால்.

முப்புரம் : பொன்மதில், வெள்ளிமதில், இரும்புமதில்.

மூவிடம் : தன்மை, முன்னிலை, படர்க்கை.

மும்மண்டலம் : அக்கினி மண்டலம், சூரிய மண்டலம், சந்திர மண்டலம்.

முக்குணம் : ராசசம், தாமசம், சாத்துவீகம்.

திரிகரணம் : மனம், வாக்கு, காயம்.

முப்பொழுது : காலை, உச்சி, மாலை.

நாற்படை : யானை, குதிரை, தேர், காலாள்.

நால்வர் : அப்பர், சுந்தரர், ஞானசம்பந்தர், மாணிக்கவாசகர்.

நானிலம் : குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல்.

நால்வகைப்பூ : நிலப்பூ, நீர்ப்பூ, கோட்டுப்பூ, கொடிப்பூ.

நாற்கதி : நரகர், தேவர்,மனிதர், விலங்கு.

நால்வேதம் : இருக்கு, யசுர், சாமம், அதர்வணம்.

நாற்குணம் : (ஆண்): அறிவு, ஓர்ப்பு, கடைப்பிடி, நிறை

(
பெண்): அச்சம், நாணம், மடம், பயிர்ப்பு.

நால் வருணம் : பிரம்மா, சைத்திரியர், வைசியர், சூத்திரர்

நான்கு புருடார்த்தம் :அறம், பொருள், இன்பம், வீடு

நான்கு அரண் : காடு,மலை, நீர், மதில்

நான்கு புண்ணியம் : தானம், தவம், கல்வி, ஒழுக்கம்

நாற்கணம் : வல்லினம், மெல்லினம், இடையினம், உயிரினம்

நால்வகையாழ் :- பேரியாழ், மகரயாழ், சகோடயாழ். செங்கோட்டியாழ்

நாற்கவி :- ஆககவி, சித்திரகவி, மதுரகவி, வித்தாரகவி

நான்கு உபாயங்கள்: சாமம், பேதம், தானம், தண்டம்

நால்வகைப்பொன்: ஆடகம், கிளிச்சிறை, சாதரூபம், சாம்பூதம்

ஜம்பொறி : மெய், வாய், கண், மூக்கு, செவி

ஜம்புலன் : சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம்

ஐந்து சக்தி : ஆதிசக்தி, பராசக்தி, இச்சாசக்தி, கிரியாசக்தி, ஞானாசக்தி

பஞ்சபூதம் : நிலம், நீர், வளி, தீ, வெளி

ஜங்கணை : வனசம், சூதம், அசோகு, முல்லை, நீலம்

பஞ்சவர்ணம் : கருமை, செம்மை, பசுமை, மஞ்சள், வெண்மை

பஞ்சமாபாதகம் : கொலை, களவு, கள், பொய், குருநிந்தை

பஞ்சலோகம் : இரும்பு, செம்பு, ஈயம், பொன், வெள்ளி

பஞ்சகௌவியம் : பால், தயிர், நெய், கோசலம், கோமயம்

பஞ்சகன்னிகை : அகலிகை, மைதிலி, தாரை, துரோபதை. மண்டோதரி

பஞ்சதந்திரம் : அசம்பிரேட்சிய காரித்துவம், அர்த்தநாசம், சந்தி விக்கிரகம், சுகிர் லாபம், மித்திர-பேதம்

ஐந்திணை-அகம்: குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை

ஐந்திணை- புறம்: வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை

பஞ்சாங்கம் : திதி, வாரம், நாள், யோகம், கரணம்

பஞ்சநாதம் : கஞ்சம், கண்டம், தோல், நரம்பு, தொளை

ஐந்து குற்றம்: அவிச்சை, அகங்காரம், அவா, விருப்பு, வெறுப்பு

பஞ்சமூர்த்திகள்: சதாசிவம், உருத்திரன், மகேசுவரன், பிரமா, திருமால்,

ஐந்திலக்கணம் : எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி

ஐம்பெருங் காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி குண்டல கேசி, வளையாபதி,

ஐஞ்சிறு காப்பியங்கள் : நாக்குமாரகாவியம், உதயணகாவியம், யசோதரகாவியம், சூளாமணி, நீலகேசி.

ஐம்படை : சக்கரம், வில், தண்டு, வாள், சங்கு

பஞ்சலிங்கம்: சுயம்புலிங்கம், காணலிங்கம், தெய்விக-லிங்கம், ஆரிடலிங்கம், மானிடலிங்கம்.

ஐம்புலத்தார் : பிதிர், தெய்வம், விருந்து, ஒக்கல், தான்

பஞ்ச வாசனை : இலவங்கம், ஏலம், கருப்பூரம், சாதிக்காய், தக்கோலம்.

ஐங்குரவர் : அரசன், தந்தை, தாய், தமையன், குரு

ஐங்காயம் : கடுகு, ஓமம், வெந்தயம், உள்ளி, பெருங்காயம்.

ஐம்பால் : ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன்பால், பலவின்பால்

ஆறுபடை வீடு : திருப்பரங்குன்றம், பழனி, திருச்செந்தூர், குன்றுதோறாடல், திருவேரகம், பழமுதிர்சோலை.

ஆறு பருவங்கள் : கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில்.

ஆறுபகை : காமம், குரோதம், உலோபம், மோகம், மதம், மாற்சரியம்

ஆறாதாரம் : மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆஞ்ஞை

ஆறுசுவை : கைப்பு, இனிப்பு, புளிப்பு, உவர்ப்பு, துவர்ப்பு, கார்ப்பு.

ஏழு பருவம் : பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம் பெண்.

அட்டசித்தி : அணிமா, இலகிமா, மகிமா, கரிமா, பிராத்தி, பிராகாமியம், ஈசத்துவம், வசித்து.

எட்டுத் தொகை : நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறு நூறு, அகநானூறு, புறநானூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை.

அட்டலக்குமி : தனலக்குமி, தானியலக்குமி, தைரியலக்குமி, சௌரியலக்குமி, வித்தியாலக்குமி, கீர்த்திலக்குமி, விசயலக்குமி, இராச்சியலக்குமி.

அட்டகிரி : இமயம், மந்தரம், கைலை, விந்தம், நிடதம், ஏமகூடம், நீலம், கந்தமாதனம்

எட்டுவகை மெய்ப்பாடு : நகை, அழுகை, இளிவரல் மருட்கை, அச்சம், பெருமிதம், உவகை, வெகுளி,

அட்டாங்கயோகம் : இயமம், நியமம், ஆதநம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி.

நவக்கிரகம் : சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி, இராகு, கேது,

நவரத்தினம் : கோமேதகம், நீலம், பவளம், புருடராகம், மரகதம், மாணிக்கம், வைரம், வைடூரியம், முத்து.

நவதானியம் : உழுந்து, பயறு, கடலை, எள்ளு, கொள்ளு, சாமை, தினை, நெல், துவரை.

நவரசம் : அற்புதம், இரௌத்திரம், கருணை, இழிவு, சாந்தம், சிங்காரம், பயம், பெருநகை, வீரியம்

நவபேதம் : சிவம், சக்தி, நாதம், விந்து, சதாசிவம், மகேசுவரன், உருத்திரன், மால், அயன்

பத்துப் பாட்டு : மதுரைக்காஞ்சி, மலைபடுகடாம், நெடுநல் வாடை, பட்டினப்பாலை, முல்லைப்பாட்டு, குறிஞ்சிப்பாட்டு, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, பொருநராற்றுப்-படை, திருமுருகாற்றுப்படை.

தசாவதாரம் : மீன், ஆமை, பன்றி, நரசிங்கம், வாமனன், பரசுராமன், தசரதராமன், கண்ணன், பலதேவன், கல்கி.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக