இரண்டாம் வேற்றுமை
இரண்டாம் வேற்றுமையின் உருபு ஐ என்பதாகும்.
ஒரு பெயர்ச்சொல்லின் பொருளைச் செயப்படுபொருளாக வேறுபடுத்துவது இரண்டாம் வேற்றுமையாகும். எனவே இரண்டாம் வேற்றுமை யின் தரும் பொருள் செயற்படுபொருள் ஆகும்.
அதனால் இது செயற்படுபொருள் வேற்றுமை எனவும் கூறப்படும். செயப்படுபொருளாக வேறுபடுத்தப் பெயர்ச்சொல்லின் இறுதியில் ஐ என்னும் உருபு வந்து சேரும்.
எடுத்துக்காட்டு
குடத்தை வனைந்தான்
- ஆக்கப்படுபொருள் (உருவாக்குதல்)
கோட்டையை இடித்தான்
- அழிக்கப்படு பொருள்
காட்டை அடைந்தான்
- அடையப்படுபொருள்
வீட்டைத் துறந்தான்
- துறக்கப்படுபொருள் (விட்டு
விலகுதல்)
புலியைப் போன்றான்
- ஒத்தல் பொருள் (ஒப்புமை)
பொன்னை உடையான்
- உடைமைப் பொருள்
செயப்படுபொருள், செய்பொருள், கருமம், காரியம் என்பன ஒரே பொருளைத் தருவன.
வினைமுதல் (எழுவாய்) செய்யும் தொழிலின் பயனை ஏற்பது எதுவோ அது செயப்படுபொருள் எனப்படும்.
வாக்கியத்தில், (சொற்றொடரில்) கருத்தை முடிக்கும் சொல் பயனிலை ஆகும். பயனிலையைக் கொண்டு, யாரை,
எதை, எவற்றை என்ற கேள்விகளில் பொருத்தமான ஒன்றைக் கேட்டால் அதற்கு வரும் விடை செயப்படுபொருள் ஆகும்.
இரண்டாவதன் உருபு ஐயே ; அதன் பொருள்
ஆக்கல் அழித்தல் அடைதல் நீத்தல்
ஒத்தல் உடைமை ஆதி ஆகும்
(நன்னூல் : 296)
இவ் இரண்டாம் வேற்றுமைக்கு சொல்லுருபு இல்லை.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக