28.10.25

தமிழ்த் திருமணமுறை

தமிழ்த் திருமணமுறை

நாவலர் சோமசுந்தர பாரதியார் அவர்களும், தமிழ்த் தென்றல் வி.மணவழகனார்(கலியான சுந்தரனார்) அவர்களும், முத்தமிழ்க் காவலர் கி..பெ.விசுவநாதன் அவர்களும் நடத்தி வந்தவை.

01. தமிழ்த்தாய் வாழ்த்து - இறைவணக்கம்

02. திருமணத்தை நடத்தி வைக்கத் தலைவரை வேண்டுதல்

03. தலைவர் முன்னுரை

04. மணமகனுக்கு தாய் மாமன் மலர் மாலை அணிவித்தல்

05. மணமகளுக்கு தாய் மாமன் மலர் மாலை அணிவித்தல்

06. மணமகன் பெற்றோர் திருவடிகளில் சந்தனம் மலர் வைத்து வணங்கி எழுதல்

07. மணமகள் பெற்றோர் திருவடிகளில் சந்தனம் மலர் வைத்து வணங்கி எழுதல்

08. மணமகன் உறுதி மொழி

தாய்மார்களே, பெரியோர்களே தங்கள் எல்லோர் முன்னிலையிலும் என் அருகிலுள்ள திருச்செல்வியை நான் இன்று வாழ்க்கைத் துணையாக ஏற்றுக் கொள்கிறேன். வாழ்விலும் தாழ்விலும், இன்பத்திலும் துன்பத்திலும் உடனிருந்து சம உரிமை வழங்கி வள்ளுவர் நெறி நின்று இல்லறத்தை இனிது நடத்துவேன் என உங்கள் முன்பு உறுதி கூறுகின்றேன்.

09. மணமகள் உறுதி மொழி நானும் அவ்வாறே உறுதி கூறுகின்றேன்.

10. தேங்காய் பழத்தட்டு ஒன்று மங்கல நாணுடன் வாழ்த்துக்காகச் சென்றுவருதல்

11.உதிரிப்பூக்களை வாழ்த்துவதற்காக பெரியோர்களுக்கும் வழங்குதல்

தாய்மார்களுக்கும்

12. திருமங்கலநாண் அணிவித்தல்.

13.அகவை முதிர்ந்த பெண்களிற் சிலர் மங்கல நாணில் சந்தனம் குங்குமம் வைத்து வாழ்த்துதல்

14. அகவை முதிர்ந்த ஆண்களிற் சிலர் மணமக்களுக்கு திருநீறு இட்டு வாழ்த்துதல்

15. மணமகனுக்கு மைத்துனன் மோதிரம் அணிதல்

16. மைத்துனனுக்கு மரியாதை செய்தல்

17. மணமக்கள் மாலை மாற்றிக் கொண்டு மாறி உட்காருதல்

18. கற்கண்டு மணமக்களுக்கு வழங்கி மற்றவர்களுக்கும் வழங்குதல்.

19. நல்லறிஞர் சிலர் மணமக்களுக்கு வாழ்த்துரை வழங்குதல்

20. தலைவர் முடிவுரை

21. மணமக்களைப் பொன்னாலும் பொருளாலும் வாழ்த்திப் பாலும் பழமுங்கொடுத்து அனுப்புதல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக