யோ. பெனடிக்ற் பாலன்
யோ. பெனடிக்ற் பாலன் (1939 1997) ஈழத்து எழுத்தாளர் ஆவார். இவர் பல சிறுகதைகளையும், புதினங்களையும், நாடகங்களையும், கல்வியியல் சார் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். இவரது 'விபச்சாரம் செய்யாதிருப்பாயாக' என்ற சிறுகதைத் தொகுதிக்கு 1995 இல் சாகித்திய மண்டலப் பரிசு கிடைத்தது.
வாழ்க்கைக் குறிப்பு
பெனடிக்ற் பாலன் இலங்கைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டமும், அரசறிவியலில் சிறப்புப் பட்டமும் பெற்றவர்.[2] யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் லெனினது கல்விச் சிந்தனைகளை ஆய்வு செய்து முதுகலைப் பட்டம் பெற்றார். கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தில் பத்திராதிபராகப் பணியாற்றிய இவர் பயிற்றப்பட்ட ஆசிரியராக பதுளை, கந்தேகெதரைத் தமிழ் மகா வித்தியாலயத்தில் 1964 முதல் ஐந்து ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றினார். உளவியல் விரிவுரையாளராகக் கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் 1984 முதல் 8 ஆண்டுகள் பணியாற்றிப் பின்னர் பிரதிக் கல்விப் பணிப்பாளராகப் பணியாற்றினார்.
எழுத்துப் பணி
யாழ் இளம் எழுத்தாளர் சங்கத்தை ஆரம்பித்து, அதன் வெளியீடான "மலர்" என்னும் சஞ்சிகையின் ஆசிரியராகவும் பணியாற்றினார். இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்க யாழ் கிளையின் தீவிர செயற்பாட்டாளராகவும் விளங்கினார். தினகரன், வீரகேசரி, சிந்தாமணி, ஈழநாடு, முரசொலி ஆகிய பத்திரிகைகளிலும் தாமரை, தாயகம், வசந்தம், குமரன், சிரித்திரன் ஆகிய இதழ்களிலும் இவரது கதைகள் பிரசுரமாகின. மலையகம் குறித்த பல சிறுகதைகளை எழுதியுள்ளார். வசந்தம் இதழில் தொடராக வெளிவந்து நூலுருப் பெற்ற இவரது "சொந்தக்காரன்" என்ற புதினம்[2] மலையக மக்களின் வீடில்லாப் பிரச்சினையை மையமாகக் கொண்டது. இந்நூல் இவருக்கு இலக்கிய உலகில் ஒரு நிரந்தர இடத்தைப் பெற்றுக் கொடுத்தது. இவரது நீயொரு பெக்கோ என்ற நாடகம் நன்கறியப்பட்டதாகும்.
வெளியான நூல்கள்
குட்டி (குறுநாவல் எழுத்தாளர் கூட்டுறவுப் பதிப்பகம், 1963
தனிச்சொத்து (குட்டிக் கதைகள், கண்டி கலாசாரக் குழு, 1975)
சொந்தக்காரன் (புதினம், பாரி நிலையம், சென்னை, 1968)
விபசாரம் செய்யாதிருப்பாயாக.. (பதினெட்டுச் சிறுகதைகள்)
கல்வி உளவியல் அடிப்படைகள் (பூபாலசிங்கம் புத்தகசாலை - பதிப்பகம், 1996)
பலஸ்தீனம் என்னை அழைக்கிறது (குறும் புதினம்)
தலைவிதியைப் பறிகொடுத்தோர்
தேவி (த. கனகரத்தினத்துடன் இணைந்து எழுதியது, கல்வி வெளியீட்டுத் திணைக்களம், 1981)



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக