9.9.25

சங்க கால முதல், கரு, உரிப் பொருள் விளக்கம்.

சங்க கால அகத்திணை இலக்கியத்தில் முதல், கரு, உரிப் பொருள் விளக்கம்.

 

முதற்பொருள்.

இலக்கியத்தின் களமும் காலமும் முதற்பொருள் எனப்படும். களம் (நிலம் ) இயற்கைத் தன்மைக்கேற்ப நிலம் ஐந்து வகையாகப் பிரிக்கப்பட்டிருந்தது.

i. மலையும் மலைசார்ந்த இடம் - குறிஞ்சி

ii. காடும்காடு சார்ந்த இடம் - முல்லை

iii. வயலும் வயல்சார்ந்த இடம் - மருதம்

iv. கடலும் கடல்சார்ந்த இடம் - நெய்தல்

V. மணலும் மணல் சார்ந்த இடம் - பாலை.

 

காலம் :

பெரும்பொழுது, சிறுபொழுது என இருவகைப்படும்.

பெரும்பொழுது :

பருவ மாறுபாட்டை அடிப்படையாகக் கொண்டு ஒரு வருடத்தை ஆறு

பருவங்களாக வகுத்தனர்.

  கூதிர் காலம்

  கார் காலம்

  முன் பனிக்காலம்

  பின் பனிக்காலம்

  இளவேனிற் காலம்

  முதுவேனிற் காலம்

 

சிறு பொழுது :

ஒரு நாளினை ஆறாக வகுத்தமை.

மாலை,

சாமம்,

வைகறை,

காலை,

நண்பகல்,

ஏற்பாடு.

 

ஒவ்வொரு திணைக்கும் பெரும்பொழுது எது சிறுபொழுது எது என வகுக்கப்பட்டிருந்தது.

+ ம் : முல்லைக்கு பெரும்பொழுது- கார்காலம், சிறுபொழுது -மாலை

கருப்பொருள் :

நிலங்களுக்குரிய இயற்கைச் சூழல், தெய்வம், பறவை, விலங்குகள், ஊர், பூ, மரம், உணவு, யாழ், பறவை இவை போன்ற பதினான்குமாகும்.

 

உரிப்பொருள் :

இலக்கியத்திற்கு உயிரான பொருளான ஐவகைக் காதல் ஒழுக்கங் களாகும். அவை:

குறிஞ்சி - புணர்தல்,

முல்லை - இருத்தல்,

மருதம் ஊடல்,

நெய்தல் இரங்கல்,

பாலை பிரிதல் / உடன்போக்கு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக