20.9.25

A/L தியாகம் சிறுகதை

தியாகம்

கோவில்பட்டி மளிகைக் கடை கதிரேசன் செட்டியார் காலையில் பலகாரம் சாப்பிட மணி பத்து ஆகும். அப்புறம் ஒரு பத்து நிமிஷம் உட்கார்ந்து, காப்பிட்ட சிரமத்தைப் போக்கிக் கொள்ள வேண்டும். அதன் பின் கடையை நோக்கிப் புறப்படுவார். சரியாகப் பதினைந்து நிமிஷநடை பத்து இருப்பத்தைந்துக்குக் கடையில் வந்து உட்காருவார் கையில் கடிகாரம் கட்டாமலே நிமிஷக் கணக்கு தவறாமல் வருஷம் முந்நூற்று அறுபத்தைந்து நாளும் ஒரேமாதிரியாக அவர் கடைக்கு வருவதும் வீடு திரும்புவதும் இந்தக் காலத்துக் கடைச் சிப்பந்திகளுக்கு ஓர் அதிசயமாக இருக்கும் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை-அவர் அந்தக் காலத்து மனுஷர், அவர் பழகிய உலகம் அவரை விட்டாலும் அவர் அதை விடத் தயாராக இல்லை.

அன்று காலை 10-25-க்குக் கடைக்கு வந்தார். கடைக்குள் நுழையும் போது முகத்தை எப்படி வைத்துக் கொள்ள வேண்டு மோ -ஒரு குறிப்பிட்ட முறையில் வைத்துக் கொள்ள வேண்டும் அப்படி வைத்துக்கொண்டார். இந்த முகபாவத்தின் பிரதான அம்சம். கடுகடுப்பு: பிரதானமில்லாத அம்சம். ஒரு மாதிரியான விறைப்பு. இந்த முகபாவத்தைக் கடையில் உட்கார்ந்திருக்கும் வரையில் எக்காரணத்தைக் கொண்டும் மாற்றமாட்டார். நண்பர்களோ, அந்தஸ்துமிக்க வாடிக்கைக்காரர்களோ வரும்போது அவர்சிரிக்கவோ, புன்னகை செய்யவோ வேண்டிய அவசியம்ஏற்படும்‌. அதையும்இந்த முகபாவத்தை மாற்றாமலே நிறைவேற்றிவிடுவார்‌...

கடையில்வந்து உட்கார்ந்த செட்டியார்‌, கணக்கு எழுதும்சோமசுந்தரம்பிள்ளையை ஒரு தடவை ஏறிட்டுப்பார்த்தார்‌. பிள்ளையும்அவ்வண்ணமே செய்தார்‌. பிறகு செட்டியார்முகத்தைத்திருப்பி, பெட்டியைத்திறந்து அங்கே கிடக்கும்சில்லறைக்காசுகளைக்கையால்துழாவிவிட்டு, கடைச்சிப்பந்திகளை-அந்த நான்கு பேரையும்‌-மொத்தமாகவும்தனித்தனியாகவும்பார்த்தார்‌. இனி வசை புராணத்தை ஆரம்பிக்க வேண்டியதுதான்‌! எதைச்சாக்காக வைத்துக்கொண்டு ஆரம்பிக்கலாம்என்று ஒரு கணம்யோசித்தார்‌. ஒரே ஒரு கணம்தான்‌. சாக்குக்கிடைத்து விடடது...

ஏண்டா, தடிப்பயகளா! நீங்க என்ன பரதேசிகளா, சந்யாசிகளாடா? எருமை மாட்டுப்பயல்கள்‌! விடிஞ்சதும்நாலு வீட்டுக்கு யாசகத்துக்குப்போற பிச்சைக்காரப்பயல்கூட இப்பிடி சாம்பலை அள்ளிப்பூச மாட்டானேடா? தரித்திரம்பிடிச்ச பயகளா! நீங்க வந்து கடையிலே நொளைஞ்சீங்களோ இல்லையோ, யாவாரம்ஒண்ணுக்குப்பாதியாப்படுத்துப்போச்சு. இன்னும்மிச்சம்மீதியையும்படுக்க வச்சிட்டுப்போகவாடா, இப்படி நெத்தியிலே அள்ளிப்பூசிக்கிட்டு வந்திருக்கீங்க, சாம்பலை!...

கடையில்புதிதாகச்சேர்ந்திருந்த ஒரு சிப்பந்தி, நீங்களும்விபூதி பூசியிருக்கங்களே, மொதலாளி? என்று கேட்டுவிட்டான்‌.

அடி செருப்பாலே! நாயே! வாயைத்தொறக்கிறியா நீ? (கணக்குப்பிள்ளையைப்பார்த்து) ஜோட்டாலே அடிச்சு வெளியே துரத்தும்இவனை! நமக்குச்சரிப்படாது. கஞ்சிக்கில்லாம செத்த

பயல்களை எரக்கப்பட்டுக்கடையிலே வச்சது என்முட்டாள்தனம்‌, சோம சுந்தரம்பிள்ளை... என்று செட்டியார்பொரிந்து கொண்டிருக்கும்போது, கணக்குப்பிள்ளை அந்தப்புதுப்பையனைப்பார்த்து, வேலையைப்போய்ப்பாரேண்டா. மொதலாளி கிட்ட எப்பிடி ப்பேசணும்கிறது கூடத்தெரியல்லை யேடா, ஒனக்கு! உம்‌.போ! போய்வேலையைப்பாரு என்றார்‌.

அந்தப்பையனுக்கு ஆத்திரம்வந்தது. போதாக்குறைக்கு மற்ற மூன்று பையன்களும்திரும்பிக்கொண்டு அவனைப்பார்த்துச்சிரித்தார்கள்‌.

செட்டியார்அதோடு அவனை விட்டு விட்டார்‌. மற்றொரு பையனைப்பார்த்து அஸ்திரத்தைத்தொடுத்தார்‌: கழுதே! உன்னைத்தானே! பருப்புலே ஒரே கல்லாக்கெடக்குன்னு சொன்னனே, பொடைச்சி வச்சியா கழுதை?

பொடைச்சிட்டேன்‌, முதலாளி. கல்லு ஒண்ணும்இல்லையே? ன்

என்னடா! இல்லையா? அப்போ நான்பொய்யா சொல்றேன்‌? டேய்‌! இந்த மாதிரி நீ பேசிக்கிட்டே இருந்தா, செருப்படி வாங்கிக்கிட்டுத்தான்இந்தக்கடையை விட்டுப்போகப்போறே. ஆமா. நல்லா யாவுகத்திலே வச்சுக்கோ. வேலையை ஒழுங்காச்செய்‌. சோமசுந்தரம்பிள்ளை, பயபேச்சைப்பார்த்தீரா? பார்த்துக்கிட்டீரான்னேன்‌? கடைக்கு வர்ரவனெல்லாம்ஒருத்தன்பாக்கி யில்லாமே, 'என்ன செட்டியாரே, இப்படிக்கல்லைப்போட்டி ருக்கிறீரே பருப்புலேன்னு கேக்கறான்‌. இவன்என்னடான்னா 'பொடைச்சேன்‌: கல்லில்லே.ங்கிறானே, உம்‌.. கழுதை, நீ பொடைச்சுது நெசந்தானா? கேட்டதுக்கு பதில்சொல்லு! இல்லே, இப்பிடியே கடையை விட்டுக்கழே எறங்கு...

சோமசுந்தரம்பிள்ளை அந்தப்பையனைப்பார்த்து, பொடைச்சேன்‌,கல்லைச்சுத்தமாப்பொறக்கிட்டேன்மொதலாளின்னு சொன்னா என்னப்பா? நெசத்தைச்சொல்றதுக்கென்ன? என்றார்‌.

அந்தப்பையன்பதில்சொல்லாமல்நின்றான்‌.

செட்டியார்கடைப்பையன்கள்அத்தனை பேரையும்மொத்தமாகப்பார்த்து, போங்கலே, எம்மூஞ்சியிலே முளிக்காதீங்க. ஒங்களைக்கட்டிக்கிட்டு மாரடிக்கிறதுக்கு ஒரு குத்துக்கல்லைக்கட்டிக்கிட்டு மாரடிக்கலாம்‌... தொலைஞ்சி போங்கடா என்று விரட்டினார்‌.

கடைப்பையன்கள்நால்வரும்உள்ளே போய்விட்டார்கள்‌. உள்ளே போனதும்பழைய மூவரும்சிரித்தார்கள்‌.

மறுநிமிஷமே செட்டியார்அவர்களை அழைத்தார்‌. ஏண்டா, எங்கடா கூண்டோடகைலாசம்போயிட்டீங்க? உள்ளே சமுக்காளத்தை விரிச்சிப்படுத்துத்தூங்குங்கடா; நல்லாத்தூங்குங்க! இங்கேவர்ரவங்களுக்குப்புளியும்கடுகும்நான்நிறுத்துப்போடுறேன்‌.

புதுப்பையன்ஆத்திரத்தை அடக்கிக்கொண்டு, நீங்கதானே மொதலாளி, உள்ளே போகச்சொன்னீங்க? நாங்க எது செஞ்சாலும்குத்தமாச்சொல்றீங்களே..." என்று, இரண்டு வாரங்களாக அடக்கி வைத்திருந்த ஆத்திரத்தைக்கக்கியே விட்டான்‌.

அவன்பேசியதைக்கேட்டு மற்றப்பையன்கள்முகத்தைத்திருப்பிக்கொண்டு சிரிக்க, செட்டியார்தம்முகத்தை இன்னும்கடுகடுப்பாக வைத்துக்கொண்டு சோமசுந்தரம்பிள்ளையை ஏறிட்டுப்பார்க்க, பிள்ளை அந்தப்பையனைப்பார்த்து, ஏண்டா, 'பேசாதே பேசாதேன்னு ஒனக்கு எத்தனை தரம்சொல்றது? என்ன பயல்டா நீ? போய்அந்த ஈராங்காயத்தை மூட்டையிலேரு

எடுத்துக்கிட்டு வா... இங்கே பொட்டியிலே ஈராங்காயமில்லே என்றார்‌.

அதெல்லாம்எங்கே தெரியுது? எல்லாம்சொல்லித்தான்நடக்க வேண்டியிருக்கு. ஏண்டா, சோறு திங்கிறீங்களே, அதையும்சொன்னாத்தான்திம்பீங்களோ? இல்லை, கேக்கிறேன்‌. இப்படி அறிவுகெட்ட பயல்களா வந்து நமக்குன்னு சேந்திருக்காங்களே, அதைச்சொல்லும்‌...டேய்‌, ஒன்னைத்தாண்டா! அந்த முத்தையா பிள்ளை பாக்கியைக்கேட்டியா? அதையும்சொன்னாத்தான்செய்வியா?

கேட்டேன்‌, மொதலாளி.

கேட்டியாக்கும்‌? கெட்டிக்காரன்தான்‌! கேட்டு வாங்கணும்னு தோணலியோ?

பாக்கியைக்குடுத்திட்டாரு'' என்று பெருமிதத்தோடு சொன்னான்பையன்‌.

அட! என்னமோ இவன்சாமர்த்தியத்திலே வாங்கின மாதிரியில்லே பேசுறான்‌! கடன்வாங்கினவர்குடுக்காமலா இருப்பாரு? முத்தையா பிள்ளை யோக்கியன்‌. இவனைப்போல முடிச்சுமாறிப்பயலா இருப்பாருன்னு நெனைச்சான்போல இருக்கு. அதனாலேதான்‌ 'குடுத்திட்டாருன்னு ரொம்பச்சவடாலாச்சொல்றான்‌. ஏய்‌, நீ எப்படிடா போய்க்கேட்டே? கண்டிப்பாக்கேட்டியா?

கண்டி ப்பாத்தான்கேட்டேன்‌, மொதலாளி...

கண்டிப்பாக கேட்டியா? உன்னை யாருடா அப்படிக்கேக்கச்சொன்னது? எதம்பதமாப்பேசணும்னு ஓனக்கு எத்தனை

தரம்சொல்லியிருக்கேன்‌? கண்டிப்பாப்பேசினா நாளைக்கு எவண்டா கடைக்கு வருவான்‌?...

அப்போது சோமசுந்தரம்பிள்ளை குறுக்கிட்டு, சாவதான மாக, முருகையா, அந்தப்பெரிய கணக்கு நோட்டை இப்பிடி எடு என்றார்‌.

செட்டியார்முருகையாவை விட்டுவிட்டார்‌. மற்றொரு பையனை ஏறிட்டுப்பார்த்துக்கொண்டி ருந்த சமயத்தில்ஷண்முகம்பிள்ளை கடைக்கு வந்து சேர்ந்தார்‌.

அண்ணாச்சி, வாங்க! என்று அவரை வரவேற்ற செட்டி யார்‌, அந்தப்பையனைப்பார்த்து, ஏய்பரதேசி! நான்உனக்கு என்ன சொன்னேன்‌? என்னலே சொன்னேன்‌?... என்று கேட்டுக்கொண்டிருக்கும்போதேஷண்முகம்பிள்ளை பேச்சுக்கொடுத்தார்‌. செட்டியாரையா, நாளைக்கு மதுரைக்குப்போறேன்‌... என்று தான்சொல்ல வந்த விஷயத்தை ஆரம்பித்தார்‌. செட்டி யாரும்கவனத்தை அவரிடம்திருப்பினார்‌. அத்துடன்சாமான்கள்வாங்கவும்இரண்டொருவர்வந்தார்கள்‌. பையன்கள்சுறுசுறுப்பாக வேலை யில்ஈடுபட்டார்கள்‌.

கதிரேசன்செட்டியார்எப்பொழுது பார்த்தாலும்கடைச்சிப்பந்திகள்மீது இப்படிச்சீறி விழுவதைப்பல வருஷங்களாகப்பார்த்துக்கொண்டு வந்தவர்ஷண்முகம்பிள்ளை. ஒரு நாள்கூட செட்டியார்அன்பாக ஒரு பையனைப்பார்த்துப்பேசியதில்லை. மாதத்தில்பத்து நாட்களாவது அவர்செட்டியார்கடைக்கு வந்து சிறிது நேரம்உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்து விட்டுப்போவார்‌. அவர்வந்து விட்டால்கடைப்பையன்களுக்கு ஒரே கொண்டாட்டம்‌. ஏனென்றால்‌, அவரோடு பேசிக்கொண்டிருக்கும்போது செட்டியார்சஹஸ்ரநாம அர்ச்சனையைத்தாற்காலிகமாக நிறுத்தி வைத்து விடுவார்என்பது அவர்களுக்குத்தெரியும்‌.

செட்டியாரும்கூட அர்ச்சனையை நிறுத்துவதற்கு அதை ஒரு நல்ல சந்தர்ப்பமாகக்கருதுவார்‌! சோமசுந்தரம்பிள்ளை குறுக்கிட்டுக்கடைப்பையன்களுக்கு புத்தி சொல்லத்தொடங்கி விட்டாலும்‌, கொஞ்சம்மூச்சுவிட்டு ஓய்வெடுத்துக்கொள்வார்‌. பையன்களைத்தாம்திட்டும்போது தடுத்து நிறுத்துவதற்கு ஒரு ஆள்வேண்டும்என்பதற்காகவே சோமசுந்தரம்பிள்ளையை அந்த முப்பது வருஷ காலமும்தம்கடையில்கணக்குப்பிள்ளையாக வைத்துக்கொண்டிருக்கிறார்என்று சொன்னாலும்தவறில்லை.

செட்டியாரின்குணாதிசயங்களெல்லாம்கடைப்பையன்களுக்கு மனப்பாடம்‌. இரண்டு வாரங்களுக்கு முன்வந்து சேர்ந்த புதுப்பையன்வெங்கடாசலத்துக்கு இன்னும்முதற்பாடம்கூட சரிவரப்புரியவில்லை. அதனால்தான்அவனுக்குச்செட்டியார்திட்டும்போது உள்ளூற மனம்குமுறியது. பிச்சைக்காரன்‌, கஞ்சிக்கு இல்லாதவன்‌, நாயே, பேயே என்று எத்தனையோ இழிசொற்களைச்சேற்றிலே தோய்த்து எடுத்துச்செட்டியார்வீசியிருக்கிறார்‌. அவன்சொல்லாமல்கொள்ளாமல்கடையை விட்டு ஓடி விடலாம்என்று நினைத்தாலும்‌, தன்தகப்பனாரின்கண்டிப்புக்கு பயந்து இன்னும்அங்கேயே இருந்து கொண்டிருந்தான்‌.

அவனுடைய ரோஷத்தைக்கண்டும்‌, செட்டியார்தங்களைத்திட்டுவதைக்கண்டும்மற்றப்பையன்கள்சிரித்ததற்குக்காரணம்அவர்களுக்கு மானமோ ரோஷமோ இல்லாததுதான்என்று யாராவது நினைத்தால்‌, அதைவிடப்பெரிய தவறு வேறொன்றும்இருக்க முடியாது. அவர்கள்அங்கே இருந்து பழகியவர்கள்‌. செட்டியாரின்வார்த்தைகளுக்குப்பொருள்கிடையாது என்று மனப்பூர்வமாக அவர்கள்நம்பினார்கள்‌. அதற்குப்பல காரணங்கள்உண்டு: ஒன்று, வேறு எந்தக்கடையிலும்கடைச்சிப்பந்திகளுக்குக்கொடுக்கும்சம்பளத்தை விட இங்கே அதிகச்சம்பளம்‌.தீபாவளிக்குப்புது வேஷ்டி சட்டைகளுடன்ஆளுக்குப்பத்து ரூபாய்ரொக்கமும்கொடுப்பார்செட்டியார்‌. கடை வேலையைத்தவிர தம்மை மறந்துகூட வீட்டு வேலை செய்யச்சொல்லமாட்டார்‌. அவருடைய வீட்டுக்குக்கடைப்பையன்கள்போனால்‌, ஏகதேசமாகச்சாப்பிடச்சொல்வதும்உண்டு.எல்லாவற்றையும்விட முக்கியமாக,யார்என்ன புகார்சொன்னாலும்‌, எந்தப்பையனையும்வேலையிலிருந்து நீக்குவதே கிடையாது. பையன்கள்வாலிபர்களாகிக்கல்யாணம்செய்துகொள்ளும்போது, கல்யாணச்செலவுக்கு ஒரு கணிசமான தொகையும்கொடுப்பது வழக்கம்‌. அவர்கடையில்வேலை பார்த்த பையன்பெரியவனாகித்தனிக்கடை தொடங்க நினைத்தால்‌, அதற்கும்உதவி செய்வார்‌. அப்படி அவர்கைதூக்கி விட்டு இன்று மூன்று பேர்அதே ஊரில்மளிகைக்கடைகளை லாபகரமாக நடத்திக்கொண்டு வருகிறார்கள்‌.-இந்த ரகசியங்களெல்லாம்கடைப்பையன்களுக்குத்தெரியும்‌. அதனால்தான்அவருடைய வசை புராணத்தை ஏதோ வழக்கொழிந்த ஓர்அந்நிய பாஷையில்இயற்றப்பட்ட காவியமாகக்கருதி ஒதுக்கித்தள்ளி விட்டார்கள்‌.

2

 

காலையில்பையன்கள்விபூதி பூசி வந்ததைக்கண்டு சீறிவிழுந்ததைப்பார்த்த புதுப்பையன்‌, மறுநாள்வெறும்நெற்றியோடு வந்துவிட்டான்‌. அவ்வளவுதான்‌: நீ என்னடா சைவனா? இல்லை, வேதக்காரனா? (கிறிஸ்தவனா?) என்னலே முழிக்கிறே? ஒன்மூஞ்சியைப்பார்த்தா எவண்டா கடைக்கு வருவான்‌?..நெத்தியைச்சுடுகாடு மாதிரி வச்சிக்கிட்டு...

போய்விபூதியை எடுத்துப்பூசு என்று கணக்குப்பிள்ளை அவனுக்கு புத்தி சொன்னார்‌. செட்டியார்திட்டுவதை உடனே நிறுத்திவிட்டார்‌.

அன்று ஷெண்பகவல்லியம்மன்கோவிலில்கடைசி நாள்விழா. பெரிய மேளக்கச்சேரி. வாண வேடிக்கைகள்எல்லாம்ஏற்பாடாகி யிருந்தன. வெளியூர்க்கூட்டம்தெருவெல்லாம்நிரம்பி வழிந்தது. அன்று ஒரு மணி நேரம்முன்னதாகவே-அதாவது, எட்டு மணிக்கே-கடையை அடைத்து விட்டுத்தாமும்கோவிலுக்குப்போகலாம்‌, மற்றவர்களையும்வீட்டுக்கு அனுப்பிவிடலாம்என்று முடிவு கட்டியிருந்தார்செட்டியார்‌. ஏழரை மணிக்கெல்லாம்ஷண்முகம்பிள்ளை வந்தார்‌. செட்டியார்தம்ஓய்வொழிச்சலற்ற வசை புராணத்தை நிறுத்தி, அண்ணாச்சி, வாங்க என்று புன்னகையோடு அவரை வரவேற்று விட்டு, மதுரைக்கு நேத்துத்தானே போனீங்க என்று ஆச்சரியத்தோடு கேட்டார்‌.

அங்கே சோலி? போன காரியம்முடிஞ்சதும்திரும்ப வேண்டியது தானே? இன்னிக்குக்காலையிலே முதல்வண்டிக்கே வந்துட்டேனே! குளிச்சுச்சாப்பிட்டேன்‌. சொஞ்சம்அசந்து தூங்கினேன்‌, தூங்கிப்பிட்டு வர்ரேன்‌...

செட்டியார்கடிகாரத்தைப்பார்த்தார்‌. மணி ஏழே முக்கால்‌. இதுதான்சமயம்என்று ஆரம்பித்து விட்டார்‌.

ஏண்டா! தீவட்டித்தடியன்களா?

என்ன மொதலாளி என்று இரண்டு பையன்கள்ஏக காலத்தில்கேட்டார்கள்‌.

என்ன மொதலாளியா? நானும்ஒரு மணி நேரமாப்பார்த்துக்கிட்டே இருக்கேன்‌, இந்தப்பயக வாயைத்தொறந்து கேட்கட்டும்னு. நீங்க எங்கே கேப்பீங்க? ஒங்களுக்குச்சாமி ஏது, சாத்தா ஏதுடா? அப்படி தெய்வபக்தி இருந்தா, ஒங்க மூஞ்சியிலே கொஞ்சமாச்சும்களை இருக்குமே! அறிவுகெட்ட பயகளா, இன்னைக்கு திருநாள்ஆச்சே, ஊர்பூராவும்கோயிலுக்குப்போய்ச்சாமி கும்பிடுதே, நாமளும்போகணும்னு ஏண்டா ஓங்களுக்குத்தோணல்லே?

அப்போது ஷண்முகம்பிள்ளை, மொதலாளி சொல்லாமே எப்படிக்கடையைப்போட்டுட்டுச்சாமி பார்க்கப்போவாங்க? நீங்க சொல்றது நியாயமில்லியே, செட்டியாரையா! என்றார்‌.

அமா,ஆண்ணாச்சி, சாமி கும்பிடுறது கூட மொதலாளியைக்கேட்டுத்தான்கும்பிடணும்‌! நீங்களும்அவங்க கட்சியிலே சேந்து பேசுங்க! என்றார்செட்டியார்‌.

சோமசுந்தரம்பிள்ளை, பையன்களைப்பார்த்து, கடையை

அடைப்பதற்கு எல்லாவற்றையும்எடுத்து உள்ளே வைக்கச்சொன்னார்‌. அவர்களும்ஐரூராக அந்த வேலையில்இறங்கினார்கள்‌.

செட்டியார்மிகவும்கவலையோடு, இந்தப்பயகளோட கத்திக்கத்தி என்தொண்டைத்தண்ணிதான்வத்துது, அண்ணாச்சி சேச்சேச்சே! என்று சலித்துக்கொண்டார்‌.

ஷண்முகம்பிள்ளை சிரித்தார்‌.

சிறிது நேரத்தில்கடையை எடுத்து வைத்துப்பூட்டி முடித்ததும்பையன்கள்கோவிலுக்குப்போக உத்தரவுக்குக்காத்திருந்தார்கள்‌.

என்னடா, கோயிலுக்குத்தானே? என்று கேட்டார்செட்டியார்‌.

ஆமா, மொதலாளி.

கோயிலுக்கு வெறுங்கையை வீசிக்கிட்டுத்தான்போகப்போறீங்களா?

பதில்இல்லை.

என்னடா, நான்கேக்கிறேன்‌, பேசாம நிக்கிறீங்களே? வாயிலே என்ன கொளக்கட்டையா இருக்கு?

அதற்கும்பதில்இல்லை.

பாருங்க, அண்ணாச்சி, வாயைத்தொறக்கிறாங்களா பாருங்க.கோயிலுக்கு போறதுன்னா தேங்கா, பளம்‌, சூடமெல்லாம்கொண்டு போகவேண்டாமா?

கொண்டுதான்போகணும் என்றார்ஷண்முகம்பிள்ளை.

அது இந்தப்பயகளுக்குத்தெரியுதா, பாருங்க... கடவுளே! கடவுளே! என்று தலையில்அடித்துக்கொண்டு, டேய்‌! இந்தாங்கடா, ஆளுக்கு ஒத்த ரூவா. போய்‌, தேங்கா, பளம்வாங்கிட்டுப்போங்க, எங்க தலையிலே ஏன்களிமண்ணை வச்சே, சாமி? மூளையை வைக்கலேண்ணாலும்வெள்ளை மெளுகையாவது வச்சிருக்கக்கூடாதா?'ன்னு சாமியைக்கேளுங்கடா என்று சொல்லிவிட்டு நான்கு பேருக்கும்நான்குரூபாய்களைக்கொடுத்தார்‌. பையன்கள்போய்விட்டார்கள்‌.

செட்டியார்சாவிக்கொத்தோடு வீட்டை நோக்கி நடந்தார்‌.

சாப்பிட்டு அம்பாளின்நகர்வலத்தைப்பார்ப்பதாக உத்தேசம்‌. அம்பாள்கடைத்தெருவுக்கு வர மணி பதினொன்றாகிவிடும்என்பது அவருக்குத்தெரியும்‌. ஷண்முகம்பிள்ளையும்அவரும்பேசிக்கொண்டே போனார்கள்‌. அப்போது ஷண்முகம்பிள்ளை தாம்வெகுநாட்களாகக்கேட்க நினைத்ததை அன்று அப்பட்ட மாகக்கேட்டுவிடத்துணிந்தார்‌:

என்ன அண்ணாச்சி, ஒங்களை எப்போ நான்கோவிச்சிருக்கேன்‌? என்ன இப்பிடிக்கேக்கிறீங்க? நமக்குள்ளே என்ன வேத்துமை?

இல்லே, நீங்க ரொம்ப தயாள குணத்தோட இருக்கிறீங்க, ஊரிலேயும்ஒங்களைப்பத்திப்பெருமையாப்பேசிக்கிறாங்க.

கடைப்பையன்களுக்கு உங்களைப்போலச்சம்பளம்குடுக்கிறவங்க இல்லேன்னும்எனக்குத்தெரியும்‌. எல்லாம்நல்லாத்தான்இருக்கு. ஆனா, ஏன்இப்பிடி இருபத்து நாலு மணி நேரம்கடைப்பையன்களைத்திட்டிக்கிட்டே இருக்கிறீங்க? எப்போ வந்து பார்த்தாலும்‌, எவனையாவது நிப்பாட்டிவச்சிக்கிட்டுப்பொரியிறிங்களே, எதுக்கு? கொஞ்சம்அன்பா ஆதரவா இருக்கலாமில்லை?

அண்ணாச்சி, அன்பாதரவா இல்லேன்னா நான்திட்டுவனா? அதைக்கொஞ்சம்யோசனை பண்ணிப்பாருங்க. பயகளை நெசமா எனக்குப்பிடிக்கலேன்னா, ஒரே சொல்லிலே கடையை விட்டு வெளியேத்திப்பிட்டு மறு சோலி பாக்கமாட்டனா? சொல்லுங்க, இந்த முப்பது வருசத்திலே, ஒருத்தனை நான்வேலையை விட்டுப்போகச்சொல்லியிருக்கிறனா? பயக விருத்திக்கு வரணும்னுதானே தொண்டைத்தண்ணியை வத்த வச்சிக்கிட்டி ௬க்கேன்‌? கத்திக்கத்தி என்உசுரும்போகுது.

ஏன்கத்தணும்‌? நல்லபடியா ஒரு சொல்சொன்னாப்பத்தாதா?

அப்படியா சொல்றீங்க, அண்ணாச்சி? சரிதான்‌! நல்லபடி யாகச்சொன்னா பயகளுக்குத்திமிர்இல்லே ஏறிப்போகும்‌? ஒடம்பு வளையுமா? அந்தக்காலத்திலே நான்கடைப்பையனா இருந்தப்போ எங்க மொதலாளி பேசினதை நீங்க கேட்டி ருக்கணும்‌...ம்‌, அதிலே பத்திலே ஒரு பங்கு கூட நான்பேசியிருக்க மாட்டேன்‌; பேசவும்தெரியாது.

அப்பேர்ப்பட்டமொதலாளியா அவரு!

என்னங்கறீங்க? என்னப்பத்தி மட்டுமா? என்தாயி, தகப்பன்‌, பாட்டன்‌-அத்தனை பேரையும்சேர்த்துக்கேவலமாப்பேசுவாரு. புளுத்த நாய்குறுக்கே போகாது. ஒரு நாள்என்மூஞ்சியிலே அஞ்சு பலப்படியையே தூக்கி வீசிட்டாரு. தலையைக்குனிஞ்சனோ, தப்பிச்சனோ! அப்படி யெல்லாம்வசக்கிவிடப்போய்த்தான்நானும்கடைண்ணு வச்சு, யாவாரம்பண்ணி, இவ்வளவு காலமும்ஒருத்தன்பார்த்து ஒரு கொறை சொல்றதுக்கு இடமில்லாமே நிர்வாகம்பண்ணிக்கிட்டு வர்றேன்‌...

ஷண்முகம்பிள்ளை செட்டியாரின்வார்த்தைகளைக்கேட்டுச்சிரிக்க நினைத்தார்‌. ஆனாலும்அப்புறம்சிரித்துக்கொள்ளலாம்என்று அதை அடக்கிக்கொண்டு, செட்டி யாரையா! ஓங்க மேலே தப்பில்லே; ஒங்க மொதலாளியைச்சொல்லணும்‌. ஓங்களுக்கு நல்லாத்தான்பாடம்சொல்லிக்குடுத்திருக்காரு!...

செட்டியாருக்கு அவர்சொன்னது விளங்கவில்லை. அதனால்என்ன அண்ணாச்சி? என்ன சொல்றீங்க? என்று கேட்டார்‌.

ஒங்களைப்பாக்க எனக்கு உண்மையிலேயே பாவமா இருக்கு. இப்படித்கத்தினா மொதல்லே ஓங்க ஒடம்புக்கு ஆகுமா .

செட்டியாரும்தம்நிலையை எண்ணித்தாமே வருந்தினார்‌: என்ன செய்றது? நாமவாங்னெ வரம்அப்படி அந்தச்சோமசுந்தரம்பிள்ளை நடுவிலே ஏதாச்சும்செய்வாரு. அதுதான்சாக்குன்ணு கொஞ்சம்வாயை மூடுவேன்‌. அவரு இல்லேன்னா நான்கத்திக்கத்தி மூச்சே போயிருக்கும்‌. பயக நல்லாத்தலை எடுக்கணுமேன்னு தான்பாக்கிறேன்‌. அவங்க தாய்தகப்பன்மாரு என்னை நம்பி ஒப்படைச்சிருக்காங்களே... என்னமோ அண்ணாச்சி, ராத்திரி ராத்திரி வீட்டிலே வந்து படுத்துக்கிட்டே நானா நெனைச்சி, வருத்தப்பட்டுக்கிடுவேன்‌. ஒவ்வொரு சமயம்தொண்டை கட்டிக்கிடும்‌. பாலிலே பனங்கல்கண்டும்மொளகும்போட்டுக்குடிப்பேன்‌.

மொதலாளின்னு ஆயிட்டோம்‌, செய்றதைச்செய்யத்தானே வேணும்‌? அந்தா சம்புகவல்லி புண்ணியத்திலே இதுவரையிலும்ஒடம்புக்கு ஒண்ணு வந்து படுத்ததில்லை.

சரி சரி, எவ்வளவு காலம்தான்ஒடம்பு தாங்கும்‌? இனிமே ஓவ்வொண்ணையும்அப்பிடி இப்பிடி கொறைச்சிக்கிட்டு வரவேண்டியது தான்‌. நமக்கு பகவான்தொண்டையை என்ன வெங்கலத்திலையா படைச்சிருக்கான்‌? '

ஷண்முகம்பிள்ளை சிரித்துக்கொண்டே சொன்ன புத்திமதி, நியாயமானதாகவே செட்டியாருக்குப்பட்டது. அனாலும்அதை ஒப்புக்கொள்வது சுயநலம்என்று கருதினார்‌.

அண்ணாச்சி! நீங்க என்னதான்சொல்லுங்க; பயக நல்லபடியாத்தலையெடுக்கணும்‌. இவ்வளவு காலமும்இப்படி இருந்துட்டு இனி என்ன எக்கேடு கெட்டா என்னண்ணு என்னாலே இருக்க முடியாது. இனிமே என்ன? வயசு அறுபதாச்சு. உசுரை வச்சிருந்து என்னத்தைச்சாதிச்சிறப்போறோம்‌? என்று தியாக உணர்ச்சியோடு பேசினார்‌. பேச்சில்ஒரு உறுதி நிறைந்திருந்தது.

ஷண்முகம்பிள்ளை அதைப்பார்த்து, அப்பிடின்னா, நித்தியப்படி அர்ச்சனை நடக்கும்ணுதான்சொல்லுங்க என்று சொல்லிவிட்டு உரக்கச்சிரித்தார்‌.

செட்டியார்அவருடைய சிரிப்பைப்பார்த்து மிகவும்மனம்

நொந்து கொண்டு, என்னமோ அண்ணாச்சி, ஒங்களுக்குச்சிரிப்பா இருக்கு. பாருங்க, இப்போ ஒங்ககிட்டே சரியாகக்கூடப்பேச

முடியல்லே, தொண்டை வலிக்குது. நான்பொறந்த வேளை!'' என்று அழமாட்டாத குறையாகச்சொல்லியபடி நடந்தார்‌.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக