கல்விப்பொதுத் தராதரப் பத்திர (சாதாரண தர)ப் பரீட்சை, 2023(2024)
தமிழ் மொழியும் இலக்கியமும் - III
01. சுருக்கமான விடை தருக.
(1) "மடைத் தலையில் ஓடுமீன் ஓட
உறுமீன் வருமளவும் வாடியிருக்குமாம் கொக்கு"
(அ) மடைத்தலை
(ஆ) உறுமீன் என்பவற்றின் பொருளைத் தருக.
(அ) வாய்க்கால், நீரோடும் வாய்க்கால் / சிறிய நீரோடை
(ஆ). பெரியமீன், ஏற்றமீன் / பொருத்தமான மீன்
(11) "பொய்மைசேர்
மதியினிற்புலை நாத்திகங் கூறுவர்"
(அ) நாத்திகம் என்றால் என்ன?
(ஆ) அதில்
ஆசிரியருக்குள்ள வெறுப்பு எவ்வாறு வெளிப்படுகிறது?
(அ) கடவுள் மறுப்புக்கொள்கை / கடவுள் இல்லை என்று கூறுதல்
(ஆ) பொய்மை சேர்ந்தது. கீழானது (புலை) என்னும் அடைமொழிகள் மூலம், புலைநாத்திகம். பொய்மை சேர் புலை நாத்திகம்
(iii). )
"தோன்றல் துயர்க்கடலின் ஏக" இங்கு,
(அ) தோன்றல் எனக் குறிப்பிடப்படுபவர் யார்?
(ஆ) இதில்
இடம்பெற்றுள்ள அணியை
இனங்காண்க?
(அ) பரதன்
(ஆ) உருவக அணி துயர்க்கடல் / உருவகம்
(iv). "கன்றுபிரி காராவின் றுயருடைய கொடி"
(அ) கொடி எனக் குறிப்பிடப்படுபவள் யார்?
(ஆ) அவளுடைய துயரம் எவ்வாறு வெளிப்படுத்தப்படுகிறது?
(அ) கோசலை
(ஆ) கன்றைப் பிரிந்த பசுபோல என்ற உவமை மூலம்
(v). "என்னத்துக்கு இந்த வண்டிலுக்கு குடிலப் போல ஓல கட்டினிங்க"
இக் கூற்று,
(அ) யாரால்
(ஆ) யாருக்குக் கூறப்பட்டது?
(அ) காசிமால்
(ஆ) மூத்தவாப்பாவுக்கு
(vi). "பொய்கை ஊரன் கேண்மை
செய்து இன்புற்றனெம் செறிந்தன வளையே"
(அ) கேண்மை என்பதன் பொருள் யாது?
(ஆ) 'வளைகள் செறிந்தன' என்பதனால் வெளிப்படுத்தப்படுவது யாது?
(அ). காதல் / நட்பு/உறவு
(ஆ) மகிழ்ச்சி / பூரிப்பு / சந்தோசம் / உவகை / களிப்பு
(vii). "நெஞ்சகத்தை நிறைத்திருக்கும் நிர்மலமாம் வானில் நிறைமதிதன் துணைவியர்கள் சூழவரும் கோலம்"
(அ) 'நிர்மலமாம் வான்' என்பதனால் உணர்த்தப்படுவது யாது?
(ஆ) நிறைமதிதன் துணைவியர்கள் எனப்படுவன யாவை?
(அ) வானத்தின் களங்கமற்ற தன்மை / தெளிவான வானம்/தூய்மையான
(ஆ) நட்சத்திரங்கள் / உடுக்கள் / தாரகைகள் / விண்மீன்
(viii). "கோது இலான் இந்த மொழி கூறுதலும்
மாமாயன் கூறல்
உற்றான்"
(அ) கோது இலான்
(ஆ) மாமாயன்
எனக் குறிப்பிடப்படுபவர்கள் யாவர்?
(அ) தருமன் / யுதிஷ்டிரன்
(ஆ) கிருஷ்ணன்/கிருட்டிணன் / விஷ்ணு / திருமால்
(ix). "வெம்புலிவாய் மானென்ன வீணே கொடுத்திடுவார் செம்பொற் றிரளுடனே"
(அ) இங்கு கையாளப்பட்டுள்ள அணி யாது?
(ஆ) 'செம்பொற்றிரள்' என மறைமுகமாகக் குறிப்பிடப்படுவது யாது?
(அ) உவமை
(ஆ) சீதனம் /சீரவரிசை
(x). (அ) 'கூனலிளம் பிறைமுடித்த வேணி அலங்காரர்'
எனக் குறிப்பிடப்படுபவர் யார்?
(ஆ) 'கூனல்
இளம்பிறை' என்பதை விளக்குக.
(அ) சிவன் / குற்றாலநாதர்
(ஆ) வளைந்த இளம்பிறை
மேழி / கலப்பை
(ஆ) 'ஏர் தழைக்க வேணும்' என்ற தொடரால் உணர்த்தப்படுவது யாது?
விவசாயம் / வேளாண்மை சிறக்க வேண்டும் / உழவுத்தொழிலின் சிறப்பு / கமம்
(02 10 = 20 புள்ளிகள்
)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக